Wednesday, June 19, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு - தொடர் -04

01. தேசியக் கொடியில்  வாளேந்திய சிங்கம் எதனைக் குறிக்கிறது?   சிங்கள
      இனத்தைக் குறிக்கிறது.
02. தேசியக்கொடி எப்போது அரைக்கம்பத்தில் ஏற்றப்படும்?  துக்க சம்பவத்தின்
      போது
03. தேசியக் கொடியிலுள்ள வெள்ளரசமிலை எதனைக் குறிக்கின்றது?  பௌத்த
      மதத்தை குறிக்கின்றது.
04. இலங்கையின் தேசியக் கீதம் யாரால் பாடப்பட்டது?   ஆனந்த சமரக்கோன்
05. இலங்கை எப்போது சுதந்திரம் அடைந்தது?    1948.பெப்ரவரி 4ம் திகதி
06. இலங்கை எந்தத் துணைக்கண்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது?
      இந்திய துணைக்கண்டத்திற்கு அண்மையில்
07. இலங்கைக்கு இலங்காபுரி என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது?
      இராவணனால்
08. இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் நீரினை எது?  பாக்கு நீரினை
09. தேசியக் கொடி இதேசியக் கீதம் எதனைக் குறிக்கும்? ஓற்றுமையையும்
      நாட்டுப்பற்றையும் குறிக்கும்
10. இலங்கையின் முதலாவது பிரதமர் யார்?   டி.எஸ்.சேனநாயக்க
11. இலங்கையின் சுதேச இனங்கள் எவை? இயக்கர் , நாகர்
12. இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல் எது?  மகாவம்சம்
13. நீர் வீழ்ச்சியின் போது எதனை உற்பத்தி செய்வர்?  நீர் மின்சாரம்
14. உலகில் மிக நீண்ட நதி எது?  நைல்நதி
15. உலகில் மிக உயர்ந்த மலை சிகரம் எது?  எவரெஸ்ட்
16. இலங்கையில் அமைந்துள்ள பெரிய காடு எது?  சிங்கராஜா வனம்
17. இலங்கையில் காணப்படும் இரண்டு சரணாலயங்கள் எவை?  யால,
      வில்பத்து
18. இலங்கைக்கு வந்த முதலாவது ஆரியக் குடி எது?  விஜயனும் அவனது 700
      தோழர்களும்
19. இலங்கையின் நெல் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?  மகா இலுப்பள்ளம ,
      பதலகொட
20. இலங்கையின் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது? அகலவத்தை
      
21. இலங்கையின் தென்னை ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது? லுணுவில          
22. இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
      தலவாக்கல்ல
23. இலங்கையின் மொத்த மாகாணங்கள் எத்தனை? 9
24. இலங்கையின் மொத்த மாவட்டங்கள் எத்தனை? 25


25. இலங்கையின் வானிலை அவதான நிலையம் எங்குள்ளது? கொழும்பு

No comments:

Post a Comment